சென்னை: சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணையை நடத்த உள்ளார். பிற்பகல் 2.15 மணி அளிவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா? என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.